தீவிர அரசியலில் சச்சின்: ம.பி.-யில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு?

Subscribe to Oneindia Tamil

போபால்: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட சச்சின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான், டெண்டுல்கரை கடந்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக நியமித்தது.

Madhya Pradesh polls: Sachin Tendulkar to campaign for Congress?

இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள சச்சின் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் , 9 கூட்டங்களில் அவர் பேச உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாதான் சச்சினிடம் பேசி அழைப்பு விடுத்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு சச்சின் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதம் தனது 200 வது டெஸ்ட் போட்டியை நிறைவு செய்துவிட்டு கிரிக்கெட் விளையாட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற உள்ளார். இதன் பின்னர் பிரச்சார தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+