ம.பி. கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 111 பேர் பலி, 100 பேர் காயம்
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள ரதன்கர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 111 பேர் பலியாகினர். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ளது ரதன்கர் மாதா கோவில். அங்கு நவராத்திரியின் கடைசி நாளான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவிலை அடைய அவர்கள் சிந்து நதியின் மீதுள்ள பாலத்தில் செல்ல வேண்டும்.

அந்த பாலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பாலம் இடிந்து விழப் போவதாக வதந்தி பரவியது. இதையடுத்து பக்தர்கள் தங்கள் உயிரைக் காக்க முந்தியடித்து ஓடினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 111 பேர் பலியாகினர். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று கோவிலுக்கு 2 முதல் 4 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். இது வழக்கமாக வரும் கூட்டத்தை விட அதிகம் ஆகும். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 25 முதல் 30 வாலிபர்கள் தாங்கள் கோவிலுக்கு விரைவில் செல்ல வேண்டும் என்பதற்காக பாலம் இடிந்து விழப்போவதாக வதந்தியை பரப்பியதாக டிஐஜி டி.கே. ஆர்யா தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சிவராஜ் சிங் சவுகானை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications