போலிச் சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம்: அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலிச் சான்றிதழ்களைச் சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்யத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன், போலி பள்ளி மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பித்ததால் 2003ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டிருந்தது.

Madras High Court ordered TNSTC to take action for issuing appointments without verifying the fake certificates

இந்த உத்தரவை வேலூர் தொழிலாளர் நல நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், போலி சான்றிதழ் அளித்ததாக சொல்லப்படும் சிலர், சிறிய தண்டனைகளுடன் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ள போது, தன்னை மட்டும் பணி நீக்கம் செய்து பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளைப் போக்குவரத்துக் கழகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மனுதாரர் போலி சான்றிதழ் சமர்ப்பித்தது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளதால், அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது என்றும் அவரை பணி நீக்கம் செய்தது சரி என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதே சமயம், போலி சான்றிதழ் அளித்தவர்களுக்குப் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+