மதுரை- கன்னியாகுமரி இருவழிப் பாதைத் திட்டம்... தென்மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நிறைவேறுகிறது
மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் நீண்டகால கனவான மதுரை- கன்னியாகுமரி இருவழிப் பாதைத் திட்டத்திற்கு 'நிதி ஆயோக்' ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: மதுரை- கன்னியாகுமரி இருவழிப் பாதைத் திட்டத்திற்கு 'நிதி ஆயோக்' ஒப்புதல் அளித்து தென்மாவட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது. இருவழிப்பாதை பயன்பாட்டிற்கு வந்தால் அதிக ரயில்கள் இயக்கப்படும் என்பதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தலைநகரான சென்னையிலிருந்து, மாநிலத்தின் கடைக் கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை உள்ள ரயில்பாதை தமிழகத்தின் மிகமுக்கிய ரயில் வழித்தடமாகும்.
இந்த வழித்தடமானது சென்னை, காஞ்சிபுரம் , விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரியை வந்து அடைகிறது.
இதுதான் தமிழகத்தின் பிரதான ரயில்பாதை எனவும் குறிப்பிடலாம். ஏனென்றால் இந்தபாதையை மையமாக வைத்தே தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாதைகள் பிரிந்து செல்கின்றன.

நீண்டகால கோரிக்கை
தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்தவழித் தடத்தில் அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழித் தடம் ஒரு வழி பாதையாக இருப்பதால், மேலும் புதிய ரயில்கள் இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

கோரிக்கை ஏற்பு
தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி - மதுரை (246 கி.மீ) வழித்தடங்களை இரு வழிப்பாதைகளாக மாற்றுவதற்கு கடந்த 2012-13ம் ஆண்டு அனுமதியளித்தது. அதை தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகம் கன்னியாகுமரி - மதுரை இருவழிபாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு அறிக்கை
246கி.மீ தூரம் கொண்ட இத்திட்டம் செயல்படுத்த சுமார் ரூ 1926 கோடிகள் தேவை என்று இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தினால் இதன் மூலமாக அரசுக்கு ரேட் ஆப் ரிட்டன் வருவாய் 8.095 சதவீதம் கிடைக்கும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் ஒப்புதல்
ரயில்வே அட்டவணையில், தமிழகத்தின் மிக முக்கிய திட்டமான மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-திருநெல்வேலி-நாகர்கோவில், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜட்டில் அறிவிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் முடிந்த பிறகு தற்போது நிதி ஆயோக்கின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றுகட்டமாக அமல்
மதுரை -- மணியாச்சி -- தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ரூ.1,003.94 கோடியில்ஒரு திட்டமாகவும், மணியாச்சி -- திருநெல்வேலி -- நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் 87 கி.மீ தூரம் ஒரு திட்டம் என மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

பயண நேரம் குறையும்
கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாகச் சென்னைக்கு இருவழிபாதை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டால், தற்போது இந்த தடம் வழியாக இயக்கப்பட்டுவரும் அனைத்து ரயில்களுக்கும் பயணநேரம் கணிசமான அளவு குறையும்.

வடஇந்தியாவுக்கு அதிக ரயில்கள்
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வழியாக வடஇந்திய நகரங்களுக்கு புதிய ரயில்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.தென்மாவட்டங்களிலும் ராஜதானி, சதாப்தி, ஜனசதாப்தி, டபுள்டக்கர், கரீப்ரதம் போன்ற ரயில்கள் அறிவிக்கப்படலாம். தற்போது இருவழிபாதையாக மாற்ற அறிவிக்கப்பட்டுள்ள மதுரை - நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ஆகிய இரண்டு திட்டங்களில் முதலில் நாகர்கோவிலிருந்து மதுரை மார்க்கம் பணிகளை முதலில் தொடங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications