இரவில் மக்கள் பார்க்கும் "அந்த" வீடியோவைத் தான் நாங்களும் பார்க்கிறோம்.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு
புனே : இரவு நேரத்தில் செல்போனில் மக்கள் என்ன வீடியோக்களை பார்க்கிறார்களோ அதைத் தான் நாங்களும் பார்க்கிறோம் என்று மகாராஷ்ட்ர அமைச்சர் கிரிஷ் பட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் நடந்த மாணவர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கில், கிரிஷ் பபட் பேசினார். அப்போது அவர்...

"நீங்கள் இரவு நேரத்தில் உங்கள் மொபைல் போனில் என்ன மாதிரியான வீடியோக்களைப் பார்க்கிறீர்களோ அந்த மாதிரியான வீடியோக்களையே நாங்களும் பார்க்கிறோம். எங்களுக்கு வயதாகிவிட்டது என எண்ணாதீர்க்கள். தோற்றத்தில் முதுமை இருந்தாலும் உள்ளத்தில் நாங்கள் இளைஞரே" என்றார்.
ஆபாசப் படங்களை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகச் பரவியது. அமைச்சரின் பேச்சு மகாராஷ்ட்ர மாநில ஆளும் பாஜகவினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.
மற்றொருபுறம் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் கிரிஷ்பட், இவ்வாறு பேசியதற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அமைச்சரின் வீட்டின் முன் திரண்டு மவுனப் போராட்டம் நடத்தினர். என்.சி.பி கட்சியின் வந்தனா சவான் கூறும்போது, "அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றது. அநாகரிகமானது" என்றார்.
சிவசேனா மூத்த தலைவர் நீலம் கோரே, "கலாச்சார தலைநகராக கருதப்படும் புனேவில் ஏற்பட்டுள்ள துர்சம்பவம் அமைச்சரின் பேச்சு" எனக் கூறியுள்ளார்.
சர்ச்சைகள் வலுத்துவரும் நிலையில் தனது பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அமைச்சர் பட், "அது நகைச்சுவைக்காக கூறப்பட்டதே தவிர அதில் எவ்வித உள்ளர்த்தமும் இல்லை. இருப்பினும் அதை நான் சொல்லாமல் இருந்திருக்கலாம்" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications