மாட்டிறைச்சிக்குத் தடை... சிக்கனுக்குத் தாவிய அசைவப் பிரியர்கள்... மகாராஷ்டிர வியாபாரிகள் ஹேப்பி!
மும்பை: மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு கோழி விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டமோ அல்லது மாட்டிறைச்சிக்கு தடையோ விதிக்கப்படவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, பசு மற்றும் மாடுகளை கொல்லவும், அவற்றின் இறைச்சிகளை விற்கவோ, கொண்டு செல்லவோ, வைத்திருக்கவோ கூடாது எனவும் அரசு தடை விதித்துள்ளது.

இதனால், அசைவப் பிரியர்களின் கவனம் மாட்டிறைச்சியில் இருந்து கோழிப் பக்கம் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது. மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட ஒரே மாதத்தில், கோழி விற்பனை 5 முதல் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோழிக்கறி விற்பனை சற்று மந்தமாகவே காணப்படும் என்றும், ஆனால் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் தற்போது கோழிக்கறி விற்பனை சூடு பிடித்துள்ளதாகவும் மகாராஷ்டிர வியாபாரிகள் கூறுகின்றனர்.
இனி வரும் காலங்களில் சிக்கன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications