பெங்களூரின் பிரபல ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. 2 மணி நேரம் போராடி தீ அணைப்பு
பெங்களூர்: பெங்களூர், ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள பிரபல ஷாப்பிங் மாலில் இன்று காலை ஏற்பட்ட பயங்க தீவிபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தக்க நேரத்தில் வாடிக்கையார்கள் வெளியேறியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
பெங்களூரின், மைசூர் ரோடு பகுதியில், ராஜராஜேஸ்வரி நகர் ஆர்ச் பகுதியிலுள்ளது கோபாலன் மால். இதன் முதலாவது மாடியில் மெக் டொனால்டு உணவகம் உள்ளது. இங்கிருந்து காலை 11 மணியளவில் பெரும் புகை கிளம்பி வெளியே வந்துள்ளது. இதன்பிறகுதான் அங்கு தீவிபத்து ஏற்பட்டிப்பதை பிற ஷாப் ஊழியர்கள் கவனித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், பிராண்ட் பேக்டரி உள்ளிட்ட பல டெக்ஸ்டைல் கடைகளுக்கும் தீ பரவியிருந்தது. கடைகள் பல சேதமடைந்திருந்தாலும், தக்க நேரத்தில் தீ விபத்து குறித்து தெரியவந்ததால் வாடிக்கையாளர்களும், பிற ஊழியர்களும் காயமின்றி தப்பினர்.

ஞாயிற்றுக்கிழமை விபத்து நடந்திருந்தால் வாடிக்கையாளர்கள் கூட்டம் காரணமாக, பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக போலீசார் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவத்தால், பல மணி நேரத்திற்கு, மைசூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications