வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போராடி வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷோபியானில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்ட 44வது ராஷ்ட்ரிய துப்பாக்கிகள் படைப்பிரிவில் பணியாற்றிய சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிர் இழந்தார். வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினார்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த 919 பேருக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது. அதில் காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் இந்த விருதை பிரதமர் நரேந்திர மோடி முகுந்தின் மனைவியிடம் வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications