ஆந்திரா, தெலுங்கானா வனப்பகுதிகளில் ஒளிந்திருக்கும் ‘யுரேனியம்’ புதையல்
ஹைதராபாத்: ஆந்திர மற்றும் தெலுங்கானா வனப்பகுதிகளில் அணுமின் உற்பத்திக்கு பயன்படும் யுரேனியம் அதிகளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த யுரேனியங்களை வெளியே எடுப்பதன் மூலம் இந்தியாவின் யுரேனியத் தேவை பூர்த்தி செய்யப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அணுமின் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக யுரேனியம் விளங்குகிறது. தற்போது இந்த யுரேனியத்தை வெளிநாடுகளில் இருந்து இந்தியா பெற்று வருகிறது.
இந்நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா வனப்பகுதிகளில் அதிகளவில் யுரேனியம் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆய்வு...
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் வனப்பகுதியில் உஸ்மானியா பல்கலைக் கழகம் மற்றும் அணு தாதுப்பொருள் இயக்குநரகமும் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். 45 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அப்பகுதியில் பூமிக்கடியில் அளவுக்கு அதிகமாக யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தரமானது...
இந்த வனப்பகுதியானது ஆந்திராவில் தொடங்கி தெலுங்கானா வரை நீள்கிறது. தற்போது இப்பகுதியில் கண்டுபிடித்துள்ள யுரேனியமானது கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிடைக்கும் யுரேனியத்தை விட தரமானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

6 டன் யுரேனியம்...
மேலும், ஆந்திர மாநிலத்தில் சுமார் 5 லட்சம் டன் யுரேனியமும், தெலங்கானாவில் ஒரு லட்சம் டன் யுரேனியமும் பூமிக்கடியில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுரேனிய சுரங்கம்...
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஏற்கனவே கடப்பா மாவட்டம் தும்மளபல்லே கிராமத்தில் யுரேனிய சுரங்கம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று நலகொண்டா மாவட்டம் லம்பாபூர் - பெட்டகட்டா பகுதியிலும் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அணுத்தேவை பூர்த்தியாகும்...
ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலும் இதே போன்று அணுமின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீசைலம் பகுதியில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள யுரேனியம் படுகைகளால், இந்தியாவின் அணுத் தேவை பூர்த்தி செய்யப் படும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications