மலாலாவின் சுயசரிதை ‘ஐ ஆம் மலாலா’... தமிழ் உட்பட 4 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு
டெல்லி: இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாயின் சுயசரிதை புத்தகமான ‘ஐ ஆம் மலாலா', தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி உள்பட 4 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
பெண் கல்விக்காகக் குரல் கொடுத்ததால் தாலிபன் தீவிரவாதிகளால் கடுமையாகத் தாக்கப் பட்டவர் பாகிஸ்தான் சிறுமி மலாலா. சிகிச்சைக்காக லண்டன் சென்ற மலாலா, தற்போது பெண் கல்வியை முன்னிறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்.
தாலிபன்களால் தாக்கப்பட்டதையும், அதிலிருந்து மீண்டதையும் ‘ஐ ஆம் மலாலா' என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தில் தெளிவாக விவரித்துள்ளார்.

மலாலா தினம்...
ஐ.நா பொது அவையில் மலாலா உரையாற்றிய பின்னர் 'மலாலா தினம்' குறித்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலாலாவின் புத்தகம் உலக வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நோபல் பரிசு...
இந்நிலையில், இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை இந்தியரான கைலாஷூடன் பகிர்ந்து கொள்கிறார் மலாலா. இதனால் மலாலாவின் சுயசரிதையைப் படிப்பதில் மக்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

4 இந்திய மொழிகளில்...
எனவே, தற்போது தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் மராத்தி என நான்கு இந்திய மொழிகளில் மலாலாவின் சுயசரிதைப் புத்தகம் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

வரும் ஞாயிறு...
கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்புத்தகம் அக்ருதி பதிப்பகத்தால் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது. மற்ற மொழிகளிலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications