Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் பற்றி கார்கே சொன்ன அந்த வார்த்தை.. ஷாக்கான தொண்டர்கள்! மேடையிலேயே மன்னிப்பு - பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறிய வார்த்தை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் சுதாரித்து கொண்டு மேடையிலேயே மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தான் சட்டசபையில் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தானுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது.

Mallikarjun Kharge asks apologised for his gaffe after using Rahul Gandhi Name instead of Rajiv Gandhi

அதன்படி வரும் 25ம் தேதி ராஜஸ்தானில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் பிற மாநிலங்களை போல் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ராஜஸ்தானை பொறுத்தமட்டில் தற்போது அங்கு மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ராஜஸ்தானை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

தேர்தல் தேதி நெருங்கி உள்ளதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. மேலிட தலைவர்களுடன் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பாஜக தலைவர்களும் காங்கிரஸை வீழ்த்தி அரியணை ஏறும் வகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலம் அனுப்கார்க் பகுதியல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் பெயரை வாய்த்தவறி தவறாக கூறி மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது மல்லிகார்ஜூன கார்கே மேடையில் பேசியபோது, ‛‛ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் தங்களின் உயிரை நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர்'' என்றார். ராகுல் காந்தி எம்பியாக உயிரோடு இருக்கும் நிலையில் கார்கேவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை புரிந்து கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, ‛‛மன்னிக்கவும். நான் தவறுதலாக ராகுல் காந்தியின் பெயரை கூறிவிட்டேன். ராஜிவ் காந்தி நாட்டின் ஒற்றுமைக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். நாட்டுக்காக உயிரை கொடுத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்'' என திருத்தி கூறினார். அதோடு பாஜகவில் உயிரைப் பறிக்கும் தலைவர்கள் உள்ளனர்'' எனவும் சாடினார். இதற்கிடையே மல்லிகார்ஜுன கார்கே வாய்த்தவறி ராஜிவ் காந்தி என்பதற்கு பதில் ராகுல் காந்தியின் பெயரை கூறியதை வைத்து பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+