ரூபாய் விவகாரம்.. பிரணாப் முகர்ஜியிடம் இன்று முறையிடப்போகிறார் மம்தா பானர்ஜி

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் இன்று சந்தித்து முறையிட திரிணமூல் காங்கிரஸ தலைவரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் தில்லியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Mamata Banerjee decide to meet president Pranab Mukherjee today

அப்போது பேசிய அவர், மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படாதவரையில் போராட்டம் தொடரும் என்றும், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக வரும் 28-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+