மம்தா எந்த தேர்தலிலும் இப்படி டென்ஷனா இருந்தது இல்லை.. முதல்முறையாக வாக்குப் பதிவு நாளிலும் பிஸி
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அதிகாலை முதலே தனது தொகுதியான பவானிபூரின் வீதிகளில் இறங்கி களப்பணியாற்றி வருகிறார்.

வீதியில் இறங்கிய மம்தா
கடந்த தேர்தல்களின் போது வாக்குப்பதிவு நாளன்று பெரும்பாலும் தனது இல்லத்திலேயே இருந்த மம்தா பானர்ஜி, இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் காலை 7 மணி முதலே பவானிபூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் மீது சாடல்:
தனது ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "வெளியூர்களில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் (Observers) இங்கே கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் பாஜகவின் உத்தரவின்படியே செயல்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை" என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், சில வாக்குச் சாவடிகளில் தனது கட்சி முகவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

முக்கியப் போட்டி:
பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி களம் இறங்கியுள்ளார். நந்திகிராம் தொகுதிக்குப் பிறகு மீண்டும் இந்த இரண்டு பெரும் தலைவர்கள் நேரடியாக மோதுவதால் பவானிபூர் தொகுதி 'ஸ்டார்' தொகுதியாக மாறியுள்ளது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிக்காகப் பெருமளவில் மத்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications