மம்தா பானர்ஜி vs சிபிஐ.. 2-ஆவது நாளாக தர்னா போராட்டம் நடத்தும் தீதி.. கொல்கத்தாவில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
கொல்கத்தா: மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2-ஆவது நாளாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
மாநில அரசை கலந்தாலோசிக்காமல் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு சிபிஐ நேற்றிரவு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தர்னா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கொல்கத்தா போலீஸார் நேற்று கைது செய்தனர். இதை கண்டித்து சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார். மேலும் ஆளுநரிடம் முறையிட நேரமும் கேட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2-ஆவது நாளாக மம்தா பானர்ஜியின் தர்னா போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications