சாரதா சிட் பண்ட் மோசடி: மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா கைது! மமதாவுக்கு கடும் நெருக்கடி!!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: நாட்டை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். இதனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மிகப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பல்லாயிரம் கோடி அளவுக்கு பொதுமக்கள் பணத்தை வசூலித்துவிட்டு ஏமாற்றியதாக தொடரப்பட்ட சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mamata Banerjee's Minister Madan Mitra Arrested in Saradha Chit Fund Scam

திரிணாமுல் கட்சி எம்.பி குணால் கோஷும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் திரிணாமுல் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மிக நெருக்கமான ராஜ்யசபா எம்.பி. சிரின்ஜோய் போஸும் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ விசாரணைக்கு அழைத்தது.

மதன் மித்ராவிடம் இன்று காலை முதல் 5 மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரே காரணத்துக்காகவே தமது கட்சியினரை சிபிஐ குறி வைத்து கைது செய்வதாக மமதா குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் மமதா தலைமையிலான அரசின் அமைச்சரும் கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+