தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ! #AITC
டெல்லி: மம்தா பானர்ஜியின் திரணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
கடந்த 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார் மம்தா பானர்ஜி. அக்கட்சியின் தலைவராகவும் மம்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 1998 மற்றும் 1999ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 8 இடங்களைக் கைப்பற்றியது அந்த கட்சி. பின்னர் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான மத்திய அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார் மம்தா, 2009ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் மீண்டும் ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார்.
முதல் முறையாக, கடந்த 2011ம் ஆண்டில் இக்கட்சி, மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்தது. அதன் தலைவர் மம்தா பானர்ஜி, முதலமைச்சராகவும் பதவியேற்றார். இதன் மூலம் கம்யூனிஸ்ட்களின் 34 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மம்தா.
இதையடுத்து அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 211 தொகுதிகளில் வென்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதேபோன்று, மக்களவையில் 32 எம்பி.,க்களையும், மாநிலங்களவையில் 12 எம்.பி.,க்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கொண்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு கட்சி, 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களை மக்களவையில் கொண்டிருக்க வேண்டும் அல்லது மக்களவைத் தேர்தல் நடக்கும்போது, 4 வெவ்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு, 4 தொகுதிகளில் வென்று, 6% வாக்குகளையும் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், அக்கட்சிக்கு தேசிய அந்தஸ்து வழங்கப்படும்.
இது மட்டுமின்றி, மாநில கட்சி என்ற அந்தஸ்தையும் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கும் மேல் தக்கவைத்திருக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து விதிமுறைகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எளிதாக கடந்துவிட்டதால், அதற்கு தற்போது தேசிய கட்சி அந்தஸ்து வழங்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அளவில் பாஜக., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இந்த பட்டியலில், 7வது கட்சியாக தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications