“கேம்” ஸ்டார்ட் ! மம்தா கொடுத்த “வலிமை”யான அப்டேட்.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக “மெகா” கூட்டணி
கொல்கத்தா: 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாகிகள் தொண்டர்கள் முன்பாக அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பேசினார்.
அப்போது, "பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில ஆளும் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் மற்றும் நம்முடன் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற முடிவு செய்து உள்ளார்கள். ஆணவம் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கும் கோபத்தின் காரணமாக பாஜக அதிகாரத்தை இழக்கும்.
அமித்ஷா தான் மிகப்பெரிய 'பப்பு'.. நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் விளாசல்
எதிர்கட்சி கூட்டணி
நான், நிதீஷ் குமார், ஹேமந்த் சோரென் மற்றும் பலர் 2024 நாடாளுமன்ற தேர்தல் இணைய உள்ளோம். பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் நிற்க வேண்டும். பாஜக அடுத்த பக்கத்தில் இருக்க வேண்டும்.
ஆட்டம் தொடக்கம்
2024 தேர்தலுக்கான ஆட்டம் தொடங்கிவிட்டது. 300 தொகுதிகள் என்ற ஆணவமே பாஜகவுக்கு இந்த தேர்தலில் எதிராக நிற்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் போர் முழக்கமாக கேலா ஹோப் (ஆட்டம் தொடங்கிவிட்டது) இருந்தது. அதில் வெற்றிபெற்று திரிணாமூல் 3 வது முறையாக ஆட்சியமைத்தது.
ஜார்க்கண்ட்
மேற்கு வங்க காவல்துறை ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்களை கைது செய்து அம்மாநிலத்தில் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்தியது. ஹேமந்த் சோரன் அரசாங்கம் கவிழாமல் தடுத்தது." என்றார். கடந்த ஜூலை மாதம் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காரில் கட்டுக்கட்டான பணத்துடன் மேற்கு வங்க வழியாக கைது செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டார்கள்.
குதிரை பேரம்
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியை கவிழ்க்க பாஜக எம்.எல்.ஏக்களுக்கு ரூ.10 கோடி வழங்க முன்வந்ததுடன் அமைச்சர் பதவியும் வழங்குவதாக வாக்குறுதியளித்ததாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்து இருந்தார். சில நாட்களுக்கு முன்பாக அம்மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜே.எம்.எம். வெற்றிபெற்றது.