தேசியவாதம் குறித்து நமக்கு பாடம் நடத்துறாங்க...ஆனா நாட்டு வளத்தை விக்கிறாங்க...பாஜகவை விளாசிய மம்தா!
கொல்கத்தா: மத்திய பட்ஜெட் விவசாயிகள் எதிர்ப்பு, மக்கள் எதிர்ப்பு மற்றும் நாட்டுக்கு எதிரான பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
பா.ஜ.க.வினர் தேசியவாதம் குறித்து மற்றவர்களுக்கு சொற்பொழிவு நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள்தான் நாட்டை விற்கிறார்கள் என்றும் பாஜகவை அவர் கடுமையாக சாடினார் .

நாட்டின் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் 2021-22-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- மத்திய பட்ஜெட் மக்களை ஏமாற்றுவதற்கான பட்ஜெட். விவசாயிகள் எதிர்ப்பு, மக்கள் எதிர்ப்பு மற்றும் நாட்டுக்கு எதிரான பட்ஜெட்தான் இது.
அவர்கள் (பா.ஜ.க) தேசியவாதம் குறித்து மற்றவர்களுக்கு சொற்பொழிவு நடத்துகிறார்கள். ஆனால் ஒரு வரைமுறையில்லாமல் அவர்கள்தான் நாட்டை விற்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீடு, ரெயில்வே மற்றும் துறைமுகங்கள் என அனைத்தையும் தனியாரிடம் விற்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications