ஆதார் நம்பர் கேட்கும் 'மிரட்டல் மெசேஜ்கள்'.. அசராத அரசு.. அடுத்து என்ன?
அந்தரங்க உரிமை குறித்து தெளிவாக உள்ள தீர்ப்பு மம்தாவுக்கு சாதகமாகும். அதை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இந்த மிரட்டல் மெசேஜ்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
டெல்லி: ஆதார் எண் கேட்டு தொல்லை தரும் செல்போன் நிறுவனங்களுக்கு எதிராகவும், அதற்கு அடித்தளம் போடும் மத்திய அரசுக்கு எதிராகவும், முஷ்டியை முறுக்கியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
தினமும் காலையில் விழித்ததுமோ, அல்லது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என காபியோடு சாய்ந்து அமரும் மாலை வேளையிலோ, பகீரென பீதியை கிளப்பும் ஒரு எஸ்எம்எஸ் தினமும் உங்களுக்கு வருகிறதா.
அலர்ட்! என்று அபாய சங்குடன் அந்த மெசேஜ் விரிவடைகிறதா? ஆதார் எண்ணை இந்த செல்போன் எண்ணுடன் விரைவிலேயே இணைத்துவிடாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அது மிரட்டுகிறதா? இதற்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்பதாக இருந்தால் இது உங்கள் ஒருவரின் பதில் இல்லை. ஒட்டுமொத்த இந்தியர்களின் பதிலும் அதேதான்.

அசையாத மத்திய அரசு
ஆதார் எண்ணை அரசின் அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயப்படுத்த கூடாது, ஆதார் எண் என்பது அந்தரங்க உரிமையை பாதிக்க கூடாது.., இப்படியெல்லாம் எத்தனை முறை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சம்மட்டியால் அடித்தாலும், அசைந்து கொடுக்காமல் அடம் பிடிக்கும் மத்திய அரசின் உறுதியால்தான் இந்த பகீர் மெசேஜ்களை நாம் பார்க்க வேண்டியதாக உள்ளது.

மிரட்டும் மெசேஜ்கள்
ஆதார் எண்ணை இணைப்பதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, நேரம் இருக்கிறதோ இல்லையோ, அதெல்லாம் முக்கியமில்லை. எங்களுக்கு எங்கள் வேலை ஆக வேண்டும் என்ற மிரட்டும் தொனிதான் இதில் தென்படுகிறது. இதில் ஐடியாவும் ஒன்றுதான் வோடபோனும் ஒன்றுதான். இந்த விஷயத்தில் அவர்களுக்குள் எந்த தொழில் போட்டிகளும் கிடையாது. அத்தனை செல்போன் நிறுவனங்களும், இந்த 'மிரட்டல் மெசேஜ்களை' அனுப்பியபடியேதான் உள்ளன.

ஆபீஸ் போகனும்
ஆதார் எண்ணை இணைக்க விரும்புவோருக்கும் கூட அதற்கான வசதியை செல்போன் நிறுவனங்கள் எளிமையாக்கவில்லை. செல்போன் நெட்வொர்க் அலுவலகம் சென்றுதான் இதை நாம் செய்ய முடியும். இதற்கெல்லாம் யாருக்கும் நேரம் காலம் இல்லை. இந்த நிலையில்தான், பிற மாநில முதல்வர்கள் சும்மா இருக்கும்போது, எனது செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க மாட்டேன் என பகிரங்கமாக அறிவித்தார் மம்தா பானர்ஜி.

நல்ல தீர்ப்பு வரட்டும்
இதை வாய் வார்த்தையாக மட்டுமே சொல்லிப்போகவில்லை. உச்சநீதிமன்றத்தின் படியேறிவிட்டார் மம்தா. இரண்டில் ஒன்று பார்க்காமல் விடமாட்டார் என நம்பலாம். ஏற்கனவே உச்சநீதிமன்றம், அந்தரங்க உரிமை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ள தீர்ப்பு மம்தாவுக்கு சாதகமாகும். அதை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இந்த மிரட்டல் மெசேஜ்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இன்னொரு விஷயத்தை இப்போது சொல்லியே ஆக வேண்டும். ஆதார் கொடு, அதை கொடு, இதை கொடு என கேட்டு செல்போன் எண்களை துண்டித்துவிடாதீர்கள். அப்புறம் மிஸ்டு கால் கொடுத்து உங்கள் கட்சியில் சேரவும் ஆளில்லாமல் போய்விடும் பார்த்துக்கோங்க.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications