கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மகனுக்கு பள்ளியில் அட்மிஷன் மறுப்பு: கலெக்டர் முன்பு டான்ஸ் ஆடிய தந்தை
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனது மகனுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஒருவர் மாவட்ட கலெக்டர் முன்பு நடனமாடியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் மந்த்சவ்ர் மாவட்டத்தை சேர்ந்தவர் தஷ்ரத் சூர்யவன்ஷி. அவர் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனது மகனை பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனியார் பள்ளி ஒன்றுக்கு சென்று தனது மகனை சேர்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

அதற்கு பள்ளி நிர்வாகனத்தினரோ ரூ.27 ஆயிரம் அளித்தால் தான் உங்களின் மகனை பள்ளியில் சேர்த்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட கலெக்டரை சந்திக்க அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். கலெக்டர் அலுவலகத்தில் அவருக்கு சரியான பதில் அளிக்காததால் கடுப்பானார் தஷ்ரத்.
இதையடுத்து அவர் கலெக்டர் முன்பு நடனமாடத் துவங்கினார். தஷ்ரத்தின் செயலை பார்த்த கலெக்டர் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அவரது மகனுக்கு பள்ளியில் இடம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications