தூக்கத்தில் இருந்து தாமதமாக எழுந்த மனைவிக்கு முத்தலாக்.. உத்தர பிரதேசத்தில் நடந்த கொடூரம்
தூக்கத்தில் இருந்து தாமதமாக எழுந்த காரணத்தால் உத்தர பிரதேசத்தில் ஒரு பெண்ணிற்கு முத்தலாக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
லக்னோ: தூக்கத்தில் இருந்து தாமதமாக எழுந்த காரணத்தால் உத்தர பிரதேசத்தில் ஒரு பெண்ணிற்கு முத்தலாக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கணவன் கோபத்தில் இந்த செயலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் 'குல் அஃப்ஷான்' என்ற அந்த பெண்ணை அவரது கணவன் அடித்து துப்புறுத்திய நிகழ்வும் நடந்து இருக்கிறது. தன் கணவன் நடந்து கொண்ட விதத்தை அந்த பெண் விளக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
முத்தலாக் விவகாரத்திற்கு எதிராக பலரும் பேசி வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் நடந்து இருக்கும் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தூக்கம்
உத்தரபிரதேசத்தில் இருக்கும் ராம்பூர் அசிம் நகரில் வசித்து வருகிறார் 'குல் அஃப்ஷான்' என்ற பெண். இவருக்கும் இவரது கணவனுக்கும் அடிக்கடி சண்டை வந்து இருக்கிறது. ஒவ்வொரு முறை சண்டை வரும் போதும் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யப்போவதாக அவர் மிரட்டி உள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த பெண் தூக்கத்தில் இருந்து தாமதமாக எழுந்த காரணத்தால் சண்டை முற்றி இருக்கிறது.
மோசமாக தாக்கினார்
இந்த சண்டை பெரிதானதை அடுத்து அந்த நபர் குல் அஃப்ஷானை மோசமாக தாக்கி உள்ளார். மேலும் வீட்டில் இருந்த இரும்புப் பொருளால் மோசமாக அவரை அடித்து உள்ளார். இதனால் அவரது முகம் மற்றும் கைகளில் நிறைய காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
|
முத்தலாக் கொடுத்தார்
இதையடுத்து பல நாட்களாக முத்தலாக் கொடுக்க போவதாக மிரட்டிக் கொண்டு இருந்த அந்த நபர் உண்மையாகவே முத்தலாக் கொடுத்து இருக்கிறார். மனைவியை திட்டிக் கொண்டே மூன்று முறை தலாக் சொல்லி உன்னை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் வீடியோவில் பேசியிருக்கிறார்.
முத்தலாக்கிற்கு எதிராக சட்டம்
தற்போது லோக் சபாவில் முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. முத்தலாக் ஒரு கிரிமினல் குற்றம் என்றும் இந்த சட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. லோக் சபாவில் சட்டம் இயற்றப்படும் அதே வேளையில் உத்தர பிரதேசத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.