உடம்பில் 3 கிலோ கட்டியுடன் 65 ஆண்டுகள் வாழ்ந்த உ.பி. ஆர்யா
அலிகார்: உத்தர பிரதேசத்தில் 65 ஆண்டுகளாக உடம்பில் 3 கிலோ கட்டியுடன் ஒருவர் வாழ்ந்துள்ளார். அந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்தவர் ஹேமேந்திர குப்தா ஆர்யா(65). அவரின் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையில் உள்ள இடத்தில் இருந்த 3 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்யாவுக்கு பேராசிரியர் எம்.ஹெச். பேக் தலைமையிலான மருத்துவர் குழு ஆறு மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றியது.
இது குறித்து பேராசிரியர் பேக் கூறியதாவது,
இது ஒரு அரிய வகை கட்டி. ஆர்யா பிறந்ததில் இருந்தே இந்த கட்டி அவரின் உடலில் இருந்துள்ளது. ஆனால் அண்மையில் அவருக்கு வலி ஏற்பட்டபோது நடத்தப்பட்ட சோதனையில் கட்டி இருந்தது தெரிந்து அகற்றியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications