மோடி என்னைவிட திறமையான "சேல்ஸ்மேன்"!! மன்மோகன் சிங் பாராட்டுகிறாரா...இல்லை ?
டெல்லி : பிரதமர் மோடி குறித்து விமர்சித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவர் தன்னை விட திறமையான சேல்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் பேசியதாவது...

பிரதமர் மோடி அவர்கள் என்னை விட மிகச்சிறந்த விற்பனையாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
அதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது துவக்க உரையில் 'சென்ற பொதுத்தேர்தலில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று என்னவென்றால், நாங்கள் தகவல்தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தும்
திறன்களை அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
குறிப்பாக, வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் சந்தைப்படுத்துதல் முக்கியம்.
காங்கிரஸ் சென்ற முறை பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் முறையாக மக்களிடம் சென்றடையாததே ஆகும்
இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications