குழந்தையை சுவரில் அடித்தும்.. மனைவிக்கு அயர்ன் பாக்ஸில் சூடு வைத்தும் கொலை.. சைக்கோ கணவன் கைது
கேரளாவில் ஒன்றரை வயது குழந்தையை சுவரில் அடித்து கொலை செய்துவிட்டு மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு அயர்ன் பாக்ஸில் சூடு வைத்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
கோழிக்கோடு: கேரளா மாநிலத்தில் ஒன்றரை வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்துவிட்டு மனைவியை அயர்ன் பாக்ஸில் சூடு வைத்தே கொன்ற கொடூரன் கைது செய்யப்பட்டார்.
கோழிக்கோடு மாவட்டம், குன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமதுபஷீர்(44). இவருடைய மனைவி சகிதா (37). இவர்களது ஒன்றரை வயது மகள் கதிஜாதுல்மிஸ்திரி.
முகமது பஷீருக்கு மனைவி சகிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதன் காரணமாக முகமதுபஷீர் அடிக்கடி தனது சொந்த ஊரான மடப்பள்ளிக்கு செல்வது வழக்கம்.
மீண்டும் தகராறு
இந்நிலையில் மடப்பள்ளியில் இருந்து குன்னமங்கலம் வந்த பஷீர், சகிதாவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சகிதாவின் கை, கால்களை கட்டி போட்டார்.
அயர்ன் பாக்ஸில் சூடு
இதையடுத்து அயர்ன் பாக்ஸை ஆன் செய்து சகிதாவின் உடலில் சூடு வைத்தார். இதனால் சகிதா அலறி துடித்தார். இதை தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கேட்டு அழுதது. இதனால் பஷீரின் பார்வை குழந்தையின் பக்கம் திரும்பியது.
சுவரில் அடித்து கொலை
படுக்கை அறையில் இருந்த குழந்தையை தலையணையால் அழுத்தினார். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனினும் ஆத்திரம் அடங்காமல் சுவரில் அடித்து கொலை செய்தார். பின்னர் சகிதாவின் உடலில் மேலும் அயர்ன் பாக்ஸால் சூடு வைத்தே அவரையும் கொன்றார்.
தலைமறைவு
இறந்த குழந்தையை ஒரு பெட்டியில் அடைத்து காரில் ஏற்றிக் கொண்டு கோழிக்கோட்டில் உள்ள பாலத்தில் நிறுத்தி அங்கு குழித்தோண்டி புதைத்தார்.அதன் பின்னர் மனைவியின் சடலத்தை கொண்டு வர வீடு திரும்பியபோது வீட்டின் முன்பு பொதுமக்கள், போலீஸார் சூழந்திருந்ததை பார்த்து விட்டு பஷீர் தலைமறைவானார்.
தனிப்படை அமைப்பு
அவரை பிடிக்க கோழிக்கோடு போலீஸார் தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம், கல்லடிக்கோடு என்ற இடத்தில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.