டெல்லியில் ஹோட்டல் அறையில் 12 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை
டெல்லி: மத்திய டெல்லியில் ஹோட்டல் அறையில் வைத்து தனது 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த விமல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் டெல்லிக்கு வந்துள்ளார். மத்திய டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் ஒரு இரவுக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது விமலின் மனைவி மட்டும் வெளியே சென்றுள்ளார். அந்த நேரத்தில் விமல் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அம்மாவிடம் கூறி விடாதே என்று தெரிவித்து அவர் தனது மகளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்.
சிறுமி வெளியே சென்ற தனது தாய் வந்தவுடன் ஹோட்டல் அறையில் நடந்தவற்றை தெரிவித்தார். உடனே அந்த பெண் பஹர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்று விமல் மீது புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விமலை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications