For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெத்த மகளை தாயின் கண் முன்பு 6 ஆண்டுகளாக சீரழித்த காமக்கொடூரன் கைது

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் 13 வயது மகளை 6 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மும்பையைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் தனது ஆசிரியைக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

என் அப்பா என்னை பாலியல் பலாத்காரம் செய்கிறார். என் அம்மா இதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போன்று உள்ளார். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கடிதத்தை படித்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை வசியில் உள்ள என்.ஜி.ஓ.விடம் இது குறித்து தெரிவித்தார். அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

Man rapes 13-year old daughter for six years

சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

என் தந்தை என் தாயின் கண் முன்பே என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு என் தாய் எனக்கு ஏதோ மாத்திரைகள் அளித்தார். என் தந்தை நான் 7 வயதாக இருக்கையில் இருந்து என்னை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இது குறித்து என் தாயிடம் தெரிவித்தும் அவர் எனக்கு உதவி செய்யவில்லை. என் சகோதரர்கள் எப்பொழுது எல்லாம் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்களோ அப்போது எல்லாம் அவர் என்னை பலாத்காரம் செய்தார். இது பற்றி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தும் பலனில்லை என்றார்.

45 வயதாகும் அந்த நபர் அவரின் 17 வயது மகளையும் பலாத்காரம் செய்துள்ளார். அதனால் தான் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். 13 வயது சிறுமிக்கு ஒரு அக்கா, அண்ணன், 2 தம்பிகள் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த காமக்கொடூர தந்தையை கைது செய்தனர்.

சிறுமியின் தாயோ தனக்கு எதுவும் தெரியாது என்றும், இது பற்றி 15 நாட்களுக்கு முன்பு தான் தனக்கு தெரிய வந்து கணவரை கண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

English summary
In a shocking incident, a 13-year-old girl was being repeatedly raped by her father from last six years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X