For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெற்ற மகளையே நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    பெற்ற மகளையே பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை- வீடியோ

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெற்ற மகளை 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.

    உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கம்லாபூரை சேர்ந்த 35 வயது பெண்ணை அவரின் தந்தை திருவிழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். திருவிழா நடந்த இடத்தை அடைந்ததும் அந்த பெண்ணின் தந்தை தனது நண்பர் மான் சிங்கிற்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.

    Man rapes daughter with friends

    மான் சிங் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மான் சிங் வந்ததும் அந்த தந்தை தனது மகளுடன் பைக்கில் ட்ரிபிள்ஸ் சென்றுள்ளார். அந்த தந்தை தனது மகளை தனது மற்றொரு நண்பரான மீராஜின் வீட்டிற்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

    மீராஜின் குடும்பத்தார் வீட்டில் இல்லை. இதனால் அந்த பெண்ணை மீராஜின் வீட்டில் 18 மணிநேரமாக அடைத்து வைத்து தந்தை, மான் சிங், வீட்டு உரிமையாளர் ஆகிய மூன்று பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் ஏப்ரல் 15ம் தேதி இரவு முதல் 16ம் தேதி அதிகாலை வரை நடந்துள்ளது. ஏப்ரல் 16ம் தேதி அந்த பெண் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து வந்து போலீசில் புகார் அளித்தார்.

    அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மீராஜை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு பேரையும் தேடி வருகிறார்கள். திருமணமான இரண்டு ஆண்டுகளில் அந்த பெண் தனது கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

    அந்த பெண்ணுக்கும், தந்தைக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக கூறிய பஞ்சாயத்தார் தந்தையை ஊரை விட்டு ஒதுக்கி கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டனர். இது குறித்து பஞ்சாயத்தார் போலீசாரிடம் தெரிவிக்க அவர்கள் தந்தையை கைது செய்தனர். பின்னர் அவர் பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண் தனது 14 வயது மகனுடன் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் திருவிழா நடந்த நாள் அன்று தந்தையை பார்க்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    English summary
    A man has raped his own daughter with two of his friends in Sitapur district in Uttar Pradesh on april 15. Police have arrested one culprit on tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X