உஜ்ஜைனியில் சோகமயமான திருமண விழா- மார்பில் குண்டு பாய்ந்து மணமகனின் தந்தை பலி
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்திர பிரதேசத்தில் திருமண நிகழ்வில் மணமகனின் தந்தை தவறுதலாக துப்பாக்கி குண்டு பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்காக ஊர்வலம் நடந்தது. இதில் மணமக்கள் வீட்டார் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர்.

அப்போது மணமக்களின் உறவினர்கள் சந்தோஷ மிகுதியால் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே வானத்தை நோக்கி சுட்டனர்.
இந்நிகழ்வின்போது தவறுதலாக குண்டு மணமகனின் தந்தை மார்பில் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications