சும்மா சுற்றித் திரிந்த நாயை ஏரியில் தூக்கி எறிந்து வாயில்லா ஜீவனை வதைத்த கொடூரர்கள்!
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாலத்திலிருந்து ஏரிக்குள் நாயை தூக்கி வீசியதை வீடியோ எடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போபால் அருகே படாதலாப என்ற இடத்தில் ஆற்றுப்பாலம் ஒன்றில் இரு நாய்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த இளைஞர்களில் ஒருவர் ஒரு நாயை அப்படியே தூக்கினார்.
பின்னர் அதை ஏரிக்குள் வீசினார். வாயில்லா ஜீவனை இப்படி வதைக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் அவர் சிரித்துக் கொண்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இதைத் தொடர்ந்து நாயை வீசிய நபர் அடையாளம் காணப்பட்டு அவர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏரியில் விழுந்த நாய் பிழைத்துக் கொண்டதா என அந்த வீடியோவில் தெரியவில்லை. அநத நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications