ரத்தம் சொட்ட சொட்ட மனைவியின் தலையுடன் போலீசில் சரணடைந்த இளைஞர்!
மனைவியின் தலையை வெட்டியதுடன் கணவன் போலீசில் சரணடைந்தார்.
Recommended Video

சிக்மங்களூரு: நாடு முழுவதும் வியாபித்து உள்ள கள்ளக்காதல் இறுதியில் விபரீதத்தில்தான் போய் முடிகிறது. இப்படித்தான், கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் தலையை வெட்டி எறிந்துள்ளார் மங்களூரு இளைஞர் ஒருவர்.
சிக்மங்களூரு அருகே சிவானி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். வயது 35. இவருடைய மனைவி ரூபா. வயது 28. இருவரும் இவர்களுக்கு 9 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர்.

விரக்தியில் சதீஷ்
ரூபாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்திருக்கிறது. இது ஒருநாள் சதீஷ்-க்கு தெரியவர, ரூபாவா கூப்பிட்டு கண்டித்தார். ஆனாலும் ரூபா கேட்கவில்லை. தொடர்ந்து அந்த இளைஞருடன் தொடர்பிலேயே இருந்தால். பலமுறை கண்டித்து பார்த்த சதீஷ் கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

துண்டாக வெட்டினார்
இந்நிலையில், வேலை விஷயமாக காலையிலேயே பெங்களூவரை சென்ற சதீஷ், மாலை நேரத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது ரூபா வேறு ஒரு நபருடன் ஜாலியாக இருந்ததை கண்ணால் பார்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், ரூபாவையும், அந்த மற்றொரு நபரையும் சரமாரியாக அடித்து நொறுக்கினார். ஆனாலும் அந்த நபர் ரத்த காயத்துடன் ரூபா வீட்டிலிருந்து தப்பி ஓடினார். என்ன சொன்னாலும் அடங்காமல் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்ததால், ரூபா மீது அதிக கோபமானார் சதீஷ். அங்கிருந்த அரிவாளை எடுத்து, ரூபாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.

ரத்தம் சொட்ட சொட்ட..
பின்னர் வெட்டி எடுக்கப்பட்ட ரூபாவின் தலையை ஒரு சாக்குப் பையில் போட்டு, பைக்கில் எடுத்து வைத்து கொண்டார். 20 கி.மீ. தொலைவில் உள்ள போலீஸ் ஸ்டேனுக்கு சதீஷ் பைக்கில் ரூபாவின் தலையை கொண்டு சென்றார். ரத்தம் சொட்ட சொட்ட கையில் தலையை பிடித்து கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தார் சதீஷ். நடந்த விவரங்களை கூறி சரணடைவதாகவும் கூறினார்.

அதிர்ச்சியில் உறைந்தனர்
இந்த காட்சியை கண்டதும் ஸ்டேஷனில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றார்கள். இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். பின்னர் விரைந்து சென்று வீட்டில் கிடந்த ரூபாவின் தலையில்லா முண்டத்தை கைப்பற்றி, சதீஷையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications