ஸாரிங்க, தெரியாம பண்ணிட்டேன்... கெஜ்ரிவால் மீது மை வீசியவர் மனம் மாறி ஆம் ஆத்மியில் சேர்ந்தார்
டெல்லி: கெஜ்ரிவால் மீது மை வீசிய பாஜகவைச் சேர்ந்த மனிதர் மனம் மாறி தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நச்சிகேட்டா வால்நேக்கர். பா.ஜ.கவை சேர்ந்த இவர், கடந்தாண்டு நடைபெற்ற ஆம்ஆத்மி கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீச்சு தாக்குதல் நடத்தினார்.
ஆனால், சமீபத்தில் வால்நேக்கர் மனம் மாறி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். தனது திடீர் மனமாற்றம் குறித்து திரில்கோபூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வால்நேக்கர் கூறியதாவது:-

நான் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க கட்சியில் தீவிர உறுப்பினராக இருந்து வந்தேன். எந்தவகையிலாவது இந்த நாட்டுக்கு என்னால் முடிந்த வகையில் சேவையாற்ற வேண்டும் என்று விரும்பினேன்.
ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற உறுதியான குறிக்கோளுடன் தான் நான் பா.ஜ.கவில் இணைந்தேன். ஆனால் பா.ஜ.கவால் அவ்வாறு செய்யமுடியாது என்று பின்னர்தான் உணர்ந்து கொண்டேன். மை வீசியதற்காக கெஜ்ரிவால் என்னை மன்னித்த போதுதான் நான் என் தவறை உணர்ந்தேன்.
கெஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது நான் மிகவும் வருந்தினேன். அதைப்பார்த்த என் தாயார் நீ தற்போது இருக்கும் கட்சி உனது கொள்கைகளுக்கு ஏற்றதல்ல என்று கூறினார்.
அதன் பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து என்னை மன்னிக்கும்படியும் என்னை அவரது கட்சியில் சேர்த்து நல்வழிபடுத்தும் படியும் கேட்டுக்கொண்டேன். என்னை அவர் மன்னித்து அவரது கட்சியில் இணைத்துக்கொண்டார்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கெஜ்ரிவாலை பாகிஸ்தானின் ஏஜெண்ட் என பாஜகவினர் விமர்சிப்பதற்கு வால்நேக்கர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications