மாணவிகள் மடியில் உட்கார்ந்த மாணவன்- பேஸ்புக்கில் படம் வெளியிட்டதால் சஸ்பெண்ட்
மங்களூரு: மங்களூரு பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் மாணவிகளின் மடிமீது அமர்ந்த மாணவனின் புகைப்படத்தை கேலியாக பேஸ் புக்கில் வெளியிட்டனர். இது பெரிய பிரச்சினையாகவே, தற்போது 5 மாணவிகள் மற்றும் ஒரு மாணவனை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது.
கடந்த 22 ஆம் தேதி மாணவனின் புகைப்படம் பேஸ் புக்கில் அப்லோட் செய்யப்பட்டு உள்ளது . இது குறித்து அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்து உள்ளனர்.

இது கல்லூரி மாணவர்களிடையேயும் மற்றும் பொது மக்களிடம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் கல்லூரி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அந்த மாணவர் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவியரின் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்தது. மேலும் விசாரணைக் குழுவையும் அமைத்தது. தற்போது 5 மாணவிகளும், சம்பந்தப்பட்ட மாணவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications