மணிப்பூரில் உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக வென்றது பாஜக!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதல் முறையாக வெற்று பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளது.
மணிப்பூரின் கக்சிங் நகராட்சியின் 7வது வார்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மணிப்பூர் ஆளும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தியது.
காங்கிரஸை எதிர்த்து பாஜகவும் களத்தில் குதித்தது. மொத்தமே 3 வாக்குச் சாவடிகளைக் கொண்டை இந்த வார்டு தேர்தலில் வெல்வது என்பது ஆளும் காங்கிரஸுக்கு கவுரவ பிரச்சனையாகிப் போனது.
இதனால் ஆளும் தரப்பு முழு வீச்சில் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் பாரதிய ஜனதாவின் வேட்பாளர் சன்ந்தம் பிரேமிதா 242 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிட்டார்.
இத்தனைக்கும் மணிப்பூரில் பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ, எம்.பிகூட கிடையாது. தற்போது உள்ளாட்சி இடைத்தேர்தலில் வென்றிருப்பதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திலும் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது பாஜக;