Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதெல்லாம் முடியாது.. டெல்லி சொன்னாதான் ராஜினாமா.. மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன்சிங் பிடிவாதம்!

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் இனவன்முறைகள் தொடரும் நிலையில் தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் அம்மாநில ஆளும் பாஜக அரசின் முதல்வர் பைரேன் சிங் (பிரேன் சிங்).

மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையே 3 மாதங்களாக மிகப் பெரும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3 மாதங்களாக இணையசேவை துண்டிக்கப்பட்டதால் மணிப்பூரின் உண்மை நிலவரம் வெளி உலகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

Manipur Chief Minister Biren Singh refuses to resign from post

மணிப்பூர் வன்முறைகளில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். மணிப்பூரில் குக்கி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர வலியுறுத்தி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே, பிரதமர் மோடி விளக்கம் தர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் ஒத்திவைத்துவிட்டு சபைகளில் விவாதம் நடத்த வேண்டும் என ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு இதனை பொருட்படுத்தவில்லை. இதனையடுத்து இன்று மத்திய பாஜக அரசு மீது லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அனைத்து எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் பதவியை தாம் ராஜினாமா செய்ய முடியாது என பைரேன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பைரேன்சிங் கூறியதாவது: பாஜக என்பது உலகத்தில் பெரிய கட்சிகளில் ஒன்று. பாஜகவின் டெல்லி தலைமை சொல்வதைத்தான் நான் கேட்க முடியும். டெல்லி தலைமை உத்தரவிட்டால் நான் மணிப்பூர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக 6,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்றே ஒன்றுதான் பலாத்கார வழக்கு. இம்மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவத்துடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பைரேன் சிங் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+