மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பகீர்- வேட்பாளரின் தந்தை மீது துப்பாக்கிச் சூடு- பாஜக மீது புகார்
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என்.பி.பி. கட்சி வேட்பாளரின் தந்தை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளரின் தந்தை மீது பாஜகவினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக என்.பி.பி. கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு வரும் 27-ந் தேதி, மார்ச் 5-ந் தேதி ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் வாக்குப் பதிவு நடைபெறும் 27-ந் தேதி தேவாலயங்களில் நிகழ்வுகள் இருப்பதால் தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மணிப்பூர் தேர்தல்
இதனையடுத்து மணிப்பூரில் வரும் 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மணிப்பூரில் காங்கிரஸ் செல்வாக்காக இருந்தது. ஆனால் கூண்டோடு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் அம்மாநிலத்தில் காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

சரமாரி துப்பாக்கி சூடு
இந்நிலையில் என்.பி.பி. எனப்படும் தேசிய மக்கள் கட்சியின் ஆண்ட்ரோ சட்டசபை தொகுதி வேட்பாளர் சஞ்சோய் சிங் தமது வீட்டில் தந்தை மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வேட்பாளர் சஞ்சோய் சிங்கின் தந்தை படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்ட்ரோ தொகுதியில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

பாஜக மீது புகார்
தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் சஞ்சோய் சிங் அண்மையில்தான் பாஜகவில் இருந்து விலகினார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தேசிய மக்கள் கட்சி புகார் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை முதல்வர் பைரோன்சிங் நிராகரித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் முதல்வர் பைரோன்சிங் உறுதியளித்துள்ளார். இச்சம்பவத்துக்கு மேகாலயா முதல்வரும் தேசிய மக்கள் கட்சித் தலைவருமான கான்ராட் சங்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10 தொகுதிகளில் வன்முறைகள்
மணிப்பூரில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பைரோன்சிங் எச்சரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications