மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பகீர்- வேட்பாளரின் தந்தை மீது துப்பாக்கிச் சூடு- பாஜக மீது புகார்
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என்.பி.பி. கட்சி வேட்பாளரின் தந்தை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளரின் தந்தை மீது பாஜகவினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக என்.பி.பி. கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு வரும் 27-ந் தேதி, மார்ச் 5-ந் தேதி ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் வாக்குப் பதிவு நடைபெறும் 27-ந் தேதி தேவாலயங்களில் நிகழ்வுகள் இருப்பதால் தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மணிப்பூர் தேர்தல்
இதனையடுத்து மணிப்பூரில் வரும் 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மணிப்பூரில் காங்கிரஸ் செல்வாக்காக இருந்தது. ஆனால் கூண்டோடு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் அம்மாநிலத்தில் காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

சரமாரி துப்பாக்கி சூடு
இந்நிலையில் என்.பி.பி. எனப்படும் தேசிய மக்கள் கட்சியின் ஆண்ட்ரோ சட்டசபை தொகுதி வேட்பாளர் சஞ்சோய் சிங் தமது வீட்டில் தந்தை மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வேட்பாளர் சஞ்சோய் சிங்கின் தந்தை படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்ட்ரோ தொகுதியில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

பாஜக மீது புகார்
தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் சஞ்சோய் சிங் அண்மையில்தான் பாஜகவில் இருந்து விலகினார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தேசிய மக்கள் கட்சி புகார் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை முதல்வர் பைரோன்சிங் நிராகரித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் முதல்வர் பைரோன்சிங் உறுதியளித்துள்ளார். இச்சம்பவத்துக்கு மேகாலயா முதல்வரும் தேசிய மக்கள் கட்சித் தலைவருமான கான்ராட் சங்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10 தொகுதிகளில் வன்முறைகள்
மணிப்பூரில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பைரோன்சிங் எச்சரித்துள்ளார்.
-
அவசரமாக திரும்பி வந்த அண்ணாமலை.. சென்னையில் மோடி.. இன்று பாஜகவின் கடைசி நேர ஆபரேஷன்.. யாரந்த 16 பேர் -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
“விஜய் பிரிக்கப்போவது எல்லாம் திருமாவளவன் கட்சி வாக்குகளைத்தான்.. NDAவுக்கு பாதிப்பில்லை” - எச்.ராஜா -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம்












Click it and Unblock the Notifications