மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போது மனம் உடைந்துபோய் இருந்ததாக அம்மாநிலத்திற்கு சென்றுள்ள காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் தெரிவித்து உள்ளார்.
பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட குகி பழங்குடியின மக்கள் மீது கடந்த மே மாதம் முதல் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. மெய்தி பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் குகி மக்களின் வீடுகள், கடைகளை சூறையாடி தீக்கிரையாக்கி உள்ளனர்.

3 மாதங்களாக தொடர்ந்து வரும் இந்த வன்முறை வெறியாட்டத்தில் 130 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பலி எண்ணிக்கை இதைவிட பன்மடங்கு அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முன் குகி பழங்குடியின பெண்களை மெய்தி இன வெறியர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்று கும்பலாக பலாத்காரம் செய்த கொடூர காட்சிகள் வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இதுபற்றி பேச வேண்டும் என தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆளும் மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் மக்களவையில் எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் மணிப்பூர் மாநிலத்துக்கு சென்ற எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் அம்மாநில நிலவரம், பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார்கள். வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் வசித்து வரும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகாய், "நாங்கள் மொத்தம் 4 நிவாரண முகாம்களை பார்வையிட்டோம். சுராசந்த்பூரில் 2 முகாம்களையும் இம்பாலில் மற்றும் மொய்ராங்கில் தலா 1 முகாமுக்கும் சென்று பார்வையிட்டோம்.
அங்கு தங்கி இருக்கும் மக்களிடம் பேசினோம். பெண்கள் எங்களிடம் பேசும்போது உடைந்து போனார்கள். அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ள அனைவருமே அமைதியை விரும்புகிறார்கள். எல்லோரும் தங்கள் வாழ்க்கையை மீட்டு எடுக்கவே விரும்புகிறார்கள். நாங்கள் மணிப்பூர் மாநில ஆளுநரை சந்தித்து எங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வோம்.
நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் அதிக தாமதம் ஏற்பட்டு உள்ளதாக நான் நம்புகிறேன். இதற்கு அரசாங்கம் ஒரு தீர்வை வழங்க வேண்டும். மேலும் நாங்கள் அனைவரும் அரசாங்கத்தின் திட்டத்தைக் கேட்டு எங்கள் ஆலோசனைகளை வழங்க விரும்புகிறோம்." என்று தெரிவித்து உள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications