மார்ச் 4ம் தேதி மியான்மரில் மன்மோகன்சிங் - ராஜபக்சே சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்தமாதம் மியான்மரில் நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் மார்ச் மாதம் 4ம் தேதி மியான்மர் நாட்டில் நடைபெற இருக்கும் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். அப்போது அவர் அந்த மாநாட்டிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார். இத்தகவலை டெல்லியில் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் நேற்று உறுதி படுத்தியுள்ளார்.

Manmohan Singh to meet Sri Lankan President

இது தொடர்பாக செய்தியாளர்களிடன் பேசிய சுஜாதாசிங், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வசேத விசாரணைக்கு இலங்கை உட்படவேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் இலங்கை மீதான கண்டன தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு கொடுக்குமா? என்ற கேள்விக்கு மட்டும் நேரிடையாக பதில் அளிக்க மறுத்து விட்டார். ‘தீர்மானத்தை முழுமையாக படித்து ஆய்வுசெய்த பிறகே அதுபற்றி முடிவெடுக்க முடியும்' என அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து அம்மாநாட்டில் இந்தியா சார்பாக சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். இந்நிலையில் ராஜபக்சேவுடனான பிரதமரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+