ஹரியானா: ஆட்சியமைக்க உரிமை கோரியது பாஜக.. கட்டார் முதல்வர், துஷ்யந்த் துணை முதல்வர்! நாளை பதவியேற்பு
Recommended Video
சண்டீகர்: ஹரியானா சட்டசபை பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவராக மனோகர் கட்டார் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாளை முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்கிறார்.
ஹரியானா மாநில சட்டசபைக்கு கடந்த 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஹரியானாவில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியுள்ளது. சண்டீகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கெஸ்ட் அவுஸில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பாஜக மூத்த தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான அருண் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஹரியானாவில் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாரை சட்டசபை பாஜக எம்எல்ஏக்களின் குழு தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாஜகவும், ஜனநாயக ஜனதா கட்சியும் ஆளுநர் சத்யதியோ நாராயண் ஆர்யாவை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதனால் முதல்வராக 2-ஆவது முறையாக மனோகர் லால் கட்டாரும் துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் நாளை மதியம் 2.15 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்கின்றனர். அமைச்சரவையில் யார் யார் என்பது குறித்தும் நாளை அறிவிக்கப்படும்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications