சத்தீஸ்கர் தேர்தல்- மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஒரு சி.ஆர்.பி.எப்.வீரர் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.பி. வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மாவோயிஸ்டுகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஸ்தர் மற்றும் ராஜ்நந்த்கான் பகுதிகளில் 18 தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
மாவோயிஸ்டுகள் வாக்குப் பதிவை புறக்கணிக்கக் கோரி விடுத்த அழைப்பை நிராகரித்து வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்து கேன்கர் என்ற பகுதியில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
அத்துடன் 18 தொகுதிகளில் இதுவரை மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த 20 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல் தண்டேவடா, பிஜாபூர் பகுதிகளிலும் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தண்டேவடா மோதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications