ஊரடங்கு காலத்தில் கொரோனாவை பரப்பிய ரகசிய திருமணங்கள்.. எதுவுமே செல்லாது.. மத்திய பிரதேச அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி ரகசியமாக நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல மாநிலங்களிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 Marriages conducted secretly despite a ban in lockdown, declared illegal in MP

அதன்படி மத்தியப் பிரதேசத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகளவில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் திருமண விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், மாநிலம் முழுவதும் ரகசியமாகத் திருமணங்கள் நடைபெறுவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இது தொடர்பாக மத்தியப் பிரதேச அதிகாரிகள் 130 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் குவாலியரில் உள்ள தப்ராவில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டதால் ஒரு கிராமத்திலுள்ள 20% மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய பிரதேச அரசு புதிய உத்தரவு ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதாவது ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற அனைத்து திருமணங்களையும் செல்லாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி வரும் ஊரடங்கு காலத்தில் திருமணங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியும் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற திருமணங்களுக்குச் சான்றிதழ்களை வழங்கக் கூடாது என்றும் மத்தியப் பிரதேச அரசு அம்மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+