கேரள சுகாதார திட்டத்திற்கு ரூ. 100 கோடி... உம்மன் சாண்டியிடம் வழங்கினார் மாதா அமிர்தானந்தமயி
கொல்லம்: கேரளாவில் கழிவறை கட்டவும், சுகாதார திட்டங்களுக்கும் ரூ. 100 கோடி அளிக்கும் உறுதி சான்றிதழை அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டியிடம் ஆன்மீகத் தலைவர் மாதா அமிர்தானந்தமயி வழங்கினார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே வள்ளிக்காவு என்ற இடத்தில் மாதா அமிர்தானந்தமயி 62-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. அந்த விழாவில் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி, மாதா அமிர்தானந்தமயி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, கேரள கவர்னர் பி.சதாசிவம், மேல்சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியன், மத்திய மந்திரிகள் நஜ்மா ஹெப்துல்லா, மனோஜ் சின்ஹா, ஸ்ரீபாத் எஸ்சோ நாயக், இந்தியாவுக்கான பிரான்சு நாட்டு தூதர் பிரான்கோயிஸ் ரிச்சயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கேரளாவில் கழிவறை கட்டவும், சுகாதார திட்டங்களுக்கும் ரூ.100 கோடி அளிக்கும் உறுதி சான்றிதழை அமிர்தானந்தமயி உம்மன் சாண்டியிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் அமிர்தானந்தமயி பேசுகையில், "இந்தியா ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த முகமாக உள்ளது. மற்றொருபுறம் வறுமை, கல்வியின்மை, சுகாதாரமின்மை என வேறொரு முகமாக காணப்படுகிறது. ஆரோக்கியமான, சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்கி இரு முகங்களையும் இணைத்து ஒரே அழகிய முகமாக நாம் காண வேண்டும்" என்றார்.
விழாவில், உம்மன் சாண்டி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் அமிர்தானந்தமயி சேவையை பாராட்டி பேசினர்.
சில நாட்களுக்கு முன்பு பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் கங்கை நதியை தூய்மைப்படுத்த மாதா அமிர்தானந்தமயி ரூ.100 கோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications