பாபா ராம்தேவ் வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கமாட்டாரா.. இன்னைக்கு என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
ஹரித்துவார்: மே 23 ஆம் தேதியை மோடி தினமாக கொண்டாட வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
யோகா குரு பாபா ராம்தேவ் ஏற்கனவே பல்வேறு பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசி பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று குடும்த்தில் மூன்றாவது மற்றும் அதற்கு மேலாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்றார்.
மேலும் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கக்கூடாது என்றார். இதுதொடர்பாக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றார். மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்காக அவர் பேசிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடி தினம்
அந்த சர்ச்சையே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் மேலும் ஒரு கருத்தை கூறியுள்ளார் பாபா ராம்தேவ். அதாவது ஆண்டு தோறும் மே 23ஆம் தேதி மோடி தினமாக கொண்டாடப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மக்களின் நம்பிக்கை
ஹரித்துவாரில் பாபாராம் தேவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மோடியின் வெற்றி கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. ஒரு பக்கம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றொரு பக்கம் மோடி மட்டும் தனியாக இருந்தார்.

பாதுகாப்பான கைகள்
அவர் தேர்தலில் சண்டையிட்டு உத்தரப்பிரதேசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இப்போது மக்கள் பாதுகாப்பான கைகளில் இருப்பதைப்போல் உணருகின்றனர்.

மோடி திவாஸ்
மே 23 ஆம் தேதி பாஜக மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாள் மோடி தினம் அல்லது லோக் கல்யாண் தினமாக கொண்டாடப்பட வேண்டும். இவ்வாறு பேசியுள்ளார் பாபா ராம்தேவ்.

மாட்டிறைச்சிக்கு பதில்
பசு பாதுகாவலர்களுக்கும் பசு கடத்தல்காரர்களுக்கும் இடையிலான சண்டையை நிறுத்த மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் மாட்டிறைச்சிக்கு பதில் வேறு ஏதாவது உண்ணக்கூடிய இறைச்சியை அவர்கள் உண்ணலாம் என்றும் பாபா ராம்தேவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications