தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் பிரதமர் மோடி: மாயாவதி கடும் தாக்கு
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் பிரதமர் மோடி என மாயாவதி தாக்கியுள்ளார்.
சுல்தான்பூர்: பிரதமர் நரேந்திர மோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனிதர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 4-வது கட்ட தேர்தல் வருகின்ற வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் பிரதமர் மோடி ரம்ஜான், தீபாவளி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வாக்காளர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் மோடி பேசியுள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அதே போல் பந்தல்கண்ட் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் மோடி பேசுகையில், மாயாவதியை குறித்து தாக்கி பேசினார். இதற்குப் பதிலடியாக பிரதமர் மோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனிதர் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவி மாயாவதியும் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுல்தான்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாயாவதி, பிரதமர் மோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனிதர். பகுஜன் சமாஜ் கட்சி தொடக்கத்தில் ஒரு இயக்கமாகத்தான் இருந்தது. பின்னர் தான் அது அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். திருமணமே செய்து கொள்ளாமல் சிறுபான்மையினர் நலனுக்காக குறிப்பாக முஸ்லீம்கள் நலனுக்காக நான் உழைத்து வருகிறேன்.
சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய மக்கள் தங்களது மிகப்பெரிய சொத்தாக என்னைக் கருதுகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியை பேகன்ஜி சமாஜ் கட்சி என்று கூறிய பிரதமர் மோடியை உத்தர பிரதேச மக்கள் இந்தத் தேர்தலில் பழிக்குப்பழி வாங்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications