மாயாவதி என் அத்தை மாதிரி: அகிலேஷ் யாதவ் புது பிட்
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தன் அத்தை மாதிரி என்று உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து கொண்டிருக்கிறது. மாயாவதி செல்வியா, திருமதியா அல்லது தங்கச்சியா என்று முலாயம் கேட்க பதிலுக்கு மாயாவதியோ அவரை உடனே ஆக்ரா மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் இது குறித்து முலாயமின் மகனும் உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆசம்காரில் நடந்த கூட்டத்தில் கூறுகையில்,
அனைத்து மூத்த தலைவர்களுக்கும் முழு மரியாதை அளிப்பவன் நான். என் சீனியர்கள் ஒருவரை தங்கை என்று அழைத்தால் அவர் எனக்கு அத்தை மாதிரி என்றார்.
அகிலேஷின் உறவினரும், மூத்த அமைச்சருமான சிவ் பால் கூறுகையில், மாயாவதிக்கு மருத்துவ உதவி தேவை என்றார்.