ஒசாமா பின் லேடனை தெரியும், மேற்கு வங்கத்தின் பின் லேடனை தெரியுமா?
கொல்கத்தா: முசாபல் ஹக்கை மேற்கு வங்கத்தின் பின் லேடன் என்கிறார்கள். புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முசாபல் ஹக் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் மதரஸாக்கள் தீவிரவாத செயல்களுக்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
ஹக்கை அவரது கூட்டாளிகள் பின் லேடன் என்று அழைக்கிறார்கள். அவரை விசாரித்ததில் புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.

யார் இந்த முசாபல் ஹக்?
52 வயதாகும் முசாபல் ஹக் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள முகிம்நகரைச் சேர்ந்தவர். முகிம்நகரில் அங்கீகரிக்கப்படாத மதரஸா நடத்தி வந்த அவருக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
ஜமாத்துல் முஜாஹிதீன் மூலமாக ஹக்கிற்கு வங்கதேசத்தைச் சேர்ந்த ஷேக் ரஹ்மத்துல்லாவுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஹக்கின் மதரஸாவை ஷேக் ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்பின் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த துவங்கினார்.
அந்த மதரஸாவில் ஹக் மற்றும் ஷேக் சேர்ந்து ஜமாத்துல் முஜாஹிதீனுக்கு ஆட்களை சேர்த்ததுடன், அவர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளனர்.
அது என்ன பின் லேடன்?
ஹக்கின் கூட்டாளிகள் மட்டும் அல்ல அவருடைய கிராமத்தினர் அனைவருமே அவரை பின் லேடன் என்றே அழைக்கிறார்கள். அவரது சிந்தனைகள் முதல் உடை வரை அனைத்தும் பின் லேடனை நினைவுபடுத்துகிறது. பின் லேடனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஹக் தெரிவித்துள்ளார்.
ஜிஹாத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும், தன்னுடைய மதத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் போரிடத் தயங்க மாட்டேன் என்றும் ஹக் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறார் ஹக். அதனால் தான் வங்கதேசத்தில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் ஜமாத்துல் முஜாஹிதீனுக்கு அவர் உதவி செய்ய முடிவு செய்தார்.
அவர் நீளமான தாடி வைத்து பின் லேடனைப் போன்றே ஆடை அணிகிறார். பெண்கள் அனைவரும் பர்தா அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர் ஷரியா சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கிறார்.
சட்டவிரோத மதரஸாக்கள்
மதரஸாக்கள் பற்றி தவறான கருத்து உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்று நடக்கும் மதரஸாக்களால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் சிமுலியா மற்றும் முகிம்நகரில் செயல்பட்டு வரும் அங்கீகாரம் இல்லாத மதரஸாக்களால் தான் பிரச்சனை.
ஹக் முகிம்நகரில் 2011ம் ஆண்டு மதரஸாவை துவங்கினார். அவர் மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் மதரஸாவை துவங்கினார். அவருக்கு அரசிடம் இருந்து நிதி வரவில்லை. அந்த மதரஸாவும் கண்காணிக்கப்படவில்லை.
சட்டவிரோதமாக துவங்கப்படும் மதரஸாக்களை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநில அரசு தவறிவிட்டது. இந்த மதரஸாக்கள் தீவிரவாதிகள் மேற்கு வங்கத்தில் கடைகள் துவங்க உதவி செய்தன.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications