மேகாலயா சுரங்க தொழிலாளர்களை காப்பாற்ற தீவிரம்... அதி நவீன பம்புகளுடன் களமிறங்கும் மீட்புக்குழு
Recommended Video

கவுகாத்தி:மேகாலயாவில் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையின் இறுதிக்கட்ட முயற்சியாக, அதிக விசையழுத்தம் கொண்ட பம்புகள் உதவியுடன் மீட்புக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 13-ம்தேதியில் இருந்து சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பொருட்களுடன் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மீட்பு விமானம் மேகாலயா சென்றுள்ளது.

அதற்காக, இந்திய விமானப்படையின் விமானம் அங்கு விரைந்திருக்கிறது. முன்னதாக குறைந்த விசையழுத்தம் கொண்ட மோட்டார் பம்புகளை பயன்படுத்தி சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்ற முயற்சிகள் நடந்தன.
இதேபோன்று அருகில் உள்ள சுரங்கத்திலிருந்தும், ஆற்றில் இருந்தும் நீர் வந்து கொண்டிருப்பதால் எவ்வளவு நீரை வெளியேற்றினாலும் மீண்டும் நீர் நிறைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த விசையழுத்தம் கொண்ட மோட்டார் பம்புகளை பயன்படுத்தி நீரை வெளியேற்றும் முயற்சிகள் தோல்வியடைந்ததால் புதிய மீட்பு பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி உயர் விசையழுத்தம் கொண்ட 10 பம்புகளுடன் இந்திய விமானப் படை கவுகாத்தி சென்றுள்ளது. அங்கிருந்து சாலை மார்க்கமாக அந்த பொருட்கள் சுரங்கம் இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்படும். சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்காக 70 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழுவும் சம்பந்தப்பட்ட பகுதியில் முகாமிட்டுள்ளது.
அது தவிர, விசாகப்பட்டினத்தில் இருந்து 15 பேர் கொண்ட அதி நவீன நீச்சல் வீரர்கள் கொண்ட குழுவும் களத்தில் இறங்க இருக்கிறது. மிக விரைவில் அவர்கள் களத்தில் இறங்குவார்கள் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications