மேகாலயா சுரங்க தொழிலாளர்களை காப்பாற்ற தீவிரம்... அதி நவீன பம்புகளுடன் களமிறங்கும் மீட்புக்குழு
Recommended Video

கவுகாத்தி:மேகாலயாவில் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையின் இறுதிக்கட்ட முயற்சியாக, அதிக விசையழுத்தம் கொண்ட பம்புகள் உதவியுடன் மீட்புக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 13-ம்தேதியில் இருந்து சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பொருட்களுடன் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மீட்பு விமானம் மேகாலயா சென்றுள்ளது.

அதற்காக, இந்திய விமானப்படையின் விமானம் அங்கு விரைந்திருக்கிறது. முன்னதாக குறைந்த விசையழுத்தம் கொண்ட மோட்டார் பம்புகளை பயன்படுத்தி சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்ற முயற்சிகள் நடந்தன.
இதேபோன்று அருகில் உள்ள சுரங்கத்திலிருந்தும், ஆற்றில் இருந்தும் நீர் வந்து கொண்டிருப்பதால் எவ்வளவு நீரை வெளியேற்றினாலும் மீண்டும் நீர் நிறைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த விசையழுத்தம் கொண்ட மோட்டார் பம்புகளை பயன்படுத்தி நீரை வெளியேற்றும் முயற்சிகள் தோல்வியடைந்ததால் புதிய மீட்பு பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி உயர் விசையழுத்தம் கொண்ட 10 பம்புகளுடன் இந்திய விமானப் படை கவுகாத்தி சென்றுள்ளது. அங்கிருந்து சாலை மார்க்கமாக அந்த பொருட்கள் சுரங்கம் இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்படும். சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்காக 70 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழுவும் சம்பந்தப்பட்ட பகுதியில் முகாமிட்டுள்ளது.
அது தவிர, விசாகப்பட்டினத்தில் இருந்து 15 பேர் கொண்ட அதி நவீன நீச்சல் வீரர்கள் கொண்ட குழுவும் களத்தில் இறங்க இருக்கிறது. மிக விரைவில் அவர்கள் களத்தில் இறங்குவார்கள் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications