ஆம் ஆத்மி கட்சியின் தூணே இடிந்தது: ஆதரவை வாபஸ் பெற்ற மிடில் கிளாஸ்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு இத்தனை நாட்கள் ஆதரவு அளித்து வந்த நடுத்தரவர்க்க மக்கள் தற்போது பின்வாங்கியுள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு நடுத்தர வர்க்க மக்கள் தான் அமோக ஆதரவு அளித்தனர். இந்நிலையில் அவர்கள் அந்த கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை நிறுத்தியுள்ளனர். இதனால் ஆம் ஆத்மி கட்சி தற்போது பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவை நாடியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி துவங்கப்பட்டபோது அது சாதாரண மக்களுக்காக பாடுபடும் என்று நடுத்தர வர்க்க மக்கள் நம்பினர். அதனால் அந்த கட்சிக்கு அமோக ஆதரவு அளித்தனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ டெல்லியில் ஆட்சி அமைத்த வேகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அவருக்கு ஆதரவு அளித்தவர்களின் தலையில் இடியை இறக்கினார். இவரையா நம்பினோம் என்று அவரது ஆதரவாளர்கள் நினைக்கும் வகையில் நடந்து கொண்டார்.

கடந்த சில மாதங்களாக ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகளை பார்த்து வரும் நடுத்தர வர்க்க மக்கள் அதன் மீது வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். தற்போது அந்த கட்சியை பிற்படுத்தப்பட்ட மக்கள் நம்புகிறார்கள்.
டெல்லியில் உள்ள சுல்தான்பூரில் மறுதேர்தல் வைத்தால் கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை நிச்சயம் வெற்றி பெறலாம் என்று கட்சி நினைக்கிறது. ஆனால் மறுதேர்தலை நினைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் பீதியில் உள்ளனர். கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். பலர் எப்போது வெளியேறுவார்கள் என்று தெரியவில்லை. கட்சி நிலைமை இப்படி இருக்கையில் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க துடிக்கிறார் கெஜ்ரிவால்.












Click it and Unblock the Notifications