அதிகாலையில் குலுங்கிய ஜார்க்கண்ட்.. ஆசிய கண்டத்துடன் மோதும் டெக்டோனிக் தகடுகள்! லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் லேசான அளவில் பதிவாகியிருந்ததால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இன்று அதிகாலை சுமார் 2.20 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகாவிலிருந்து 17.9 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம் 11 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவில் 3.9 நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளில் இந்த பகுதியில் தொடர்ந்து லேசான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. டெக்டோனிக் பிளேட் எனப்படும் புவியின் தகடுகள் ஆசிய கண்டத்துடன் தொடர்ந்து மோதி வருவதாகவும் இதனால்தான் அடிக்கடி இந்த பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications