தேர்தல் விதி மீறல் வழக்கில் சிறை: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கைது -ஜாமீனில் விடுதலை
ராம்பூர், உ.பி.: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு தேர்தல் விதி மீறல் வழக்கில் உ.பி மாநிலம் ராம்பூரில் உள்ள கோர்ட் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் ஜாமீனில் விடுதலையானார்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, நக்வி மற்றும் அவருடன் வந்தவர்களின் கார்களை போலீஸார் சோதனைக்காக மடக்கி நிறுத்தினர். அப்போது நக்வியின் ஆதரவாளர்கள் அதை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். காவல் நிலையம் முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆதரவாளர்கள் மத்தியில் நக்வி பேசினார்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதியை மீறும் வகையில், சட்டவிரோதமாக கூடியதாக கூறி நக்வி மீது ராம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நக்விக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து ராம்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து போலீஸார் நக்வியைக் கைது செய்தனர். இதையடுத்து நக்வி சார்பில் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அதில் ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து நக்வி விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து நக்வி கூறுகையில் இது அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு என்று கூறினார்.
மோடி அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நக்வி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications