மிசோரம்: வாக்குப் பதிவு இயந்திர கோளாறு- வாக்களிக்காத முதல்வர் ஜோரம்தங்கா- டாப் சுவாரசியங்கள்!
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தொகுதிக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா, வாக்குப் பதிவு இயந்திர கோளாறால் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்றார்.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் இன்று காலை 7 மணி முதல் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 3 மணியுடன் நிறைவடையும்.

- மிசோரமில் இன்று காலை முதலே விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணி வரை 12.80% வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த தேர்தலில் மொத்தம் 82% வாக்குகள் பதிவாகின.
- மிசோரமில் 101 வயது, 96 வயது முதியவர்கள் வரிசைகளில் காத்திருந்து வாக்களித்ததை காண முடிந்தது.

- சம்பாய் தெற்கு தொகுதியில் 101 வயது முதியவர் ஒருவர் 86 வயது மனைவியுடன் தம்பதி சகிதமாய் வந்து வாக்களித்தனர்.
- ஐஸ்வால் வடக்கு-III தொகுதியில் வாக்களித்த ஜோரம் மக்கள் இயக்க செயல் தலைவர் சப்தங்கா, மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என கனவு காண்கிறார்கள்.. நிச்சயம் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்றார்.
- மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்படி வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கல்வி அறிவு அதிகம் பெற்ற மிசோரம் மக்கள் அனைவரும் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

- காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வென்று நிச்சயம் ஆட்சி அமைக்கும் என வாக்களித்த பின்னர் நம்பிக்கை தெரிவித்தார் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் லால்சவ்தா.
- மிசோரம் முதல்வரும் மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா வாக்களிக்க முடியாமல் திரும்பினார்
- தாம் வாக்களிக்க முடியாதது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோரம் தங்கா, வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாகவே உடனடியாக வாக்களிக்க முடியவில்லை. என்னுடைய தொகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வந்து வாக்களிப்பேன் என்றார்.
- மிசோரமில் காலை 7 மணிக்கு முன்னதாக வாக்கு சாவடிகளில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக வாக்காளர்கள் காத்திருந்ததையும் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications